உன்னை சொல்லி குற்றமில்லை
இங்கொன்று கேட்டு அங்கொன்று சொல்லும் இவ்வுலகில்-நீ மட்டும்
நான் சொல்ல்வதனைத்தை கேட்டும் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல்
இருக்கிறாய் .
என் மீது தொட்டு தடவி பிணைந்து இருந்தும் -நான் தொடாமல்
நீ உணர்ச்சி பெறாமல் இருக்கிறாய் .
பசி என்று நீ அழுதும் -நான்
உண்ணும் போது என்னோடு உண்ணாமல் இருக்கிறாய்
என்னை எல்லோரிடமும் பேச வைக்கிறாய் -ஆனால்
நீ மட்டும் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.
நாகரிகத்தின் திருமகழே , உன்னை சொல்லி குற்றமில்லை
மனிதன் விஞானம் என்னும் தன்னடக்கத்தை உன்னுள்
புகுத்தி ,தன் கைக்குள் அடக்கி ,உனக்கு "கைபேசி (மொபைல்) என்று
பெயரிட்டான் அல்லவா அவனை சொல்லணும் ......
No comments:
Post a Comment